திருவள்ளுவர் கோவில் கும்பாபிஷேகம்: அதிகாரிகள் தடை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கலையாம்பூர் கிராமத்தை சேர்ந்த சிலர் கடந்த திருவள்ளுவருக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர். அதன்படி, 4.5 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையும், தமிழன்னை சிலையும் கூடிய அழகிய கோபுரம் ஆகியவை வடிவமைக்கப்பட்டது.
கோயில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் கோவில் பொது இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், இதற்கான முறையான அனுமதி அரசிடம் பெறவேண்டும். அனுமதி பெற்றே பின்பே கும்பாபிஷேகத்தை அனுமதிக்க முடியும் என்று ஆர்டிஒ ரவிச்சந்திரன், டிஎஸ்பி தங்கவேலு ஆகியோர் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விழாக்குழுவினர் போலீஸ், அதிகாரிகளின் தடையை மீறி கும்பாபிஷேகம் செய்ய முயன்றனர். அதற்கு போலீசார் மறுக்கவே, மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது.
இந்த பிரச்சனையில் முதல்வர் கருணாநிதி தலையிட்டு, தீர்த்து வைக்க வேண்டும் என்று அந்த கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications