அரிசி 1 ரூபா, குழம்பு 99 ரூபா!: வரதராஜன் கிண்டல்
Subscribe to Oneindia Tamil

அருந்ததியர் சமூக பொருளாதார உரிமைகளை வலியுறுத்தி ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சிபிஎம் சார்பின் மாநாடு நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட வரதராஜன் பேசியதாவது
சுதந்திரம் கிடைத்து 61 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அருந்ததியர் சமூகத்திற்கு மட்டும் சுதந்திரம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு சுதந்திரம் பெற்று தருவதே எங்கள் நோக்கம்.
அருந்ததியர் மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை, அடக்குமுறைகளை களையவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மக்களின் விமோச்சனத்துக்கான திறவுகோல்தான் இந்த போராட்டம். இதுபோன்ற போராட்டங்கள் தொடரும்.
முதல்வர் கருணாநிதி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் குழம்புக்கு ரூ.99 செலவாகிறதே கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இந்த அறிவிப்பு பலன் தராது என்றார்.












Click it and Unblock the Notifications