விடுதலைப் புலிகள் வசம் இருந்த நகர் மீட்பு: ராணுவம்

Subscribe to Oneindia Tamil

Sri Lanka map
கொழும்பு: விடுதலைப் புலிகள் வசம் இருந்த மல்லவி என்ற இடத்தைப் பிடித்து விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. அடுத்து மாங்குளத்தை பிடிக்கப் போவதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி பல விடுதலைப் புலிகளை கொன்று குவிப்பதாக ராணுவம் கூறி வருகிறது. இருப்பினும் உண்மையான சேத நிலவரம் குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.

சமீபத்தில் விடுதலைப் புலிகள் அடுத்தடுத்து விமான தாக்குதலை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தற்போது தமிழர் பகுதிகளில் ராணுவம், விமானம் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் பல அப்பாவிகள் உயிரிழப்பதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குடியிருப்புகளை குறி வைத்து விமானத் தாக்குதல் நடைபெறுவதாகவும் விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், முல்லைத்தீவு பகுதியில் கடந்த 2 நாட்களாக ராணுவம் விடுதலைப்புலிகளின் முகாம்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தி வருகிறது.

நாச்சிகுடா பகுதியிலும் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 15 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். வவுனியாவில்இரு தரப்புக்கும் நடத்த மோதலில் 18 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.

கடந்த 2 நாட்களில் இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 83 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் வசம் இருந்த மல்லவி என்ற பகுதியை பிடித்து விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. அங்குள்ள மருத்துவமனை, முக்கிய பகுதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

அடுத்து மாங்குளம் நோக்கி முன்னேறி வருவதாகவும் ராணுவம் கூறுகிறது.

இதுதொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+