நபிகள் குறித்த கார்ட்டூன்: வேலூரில் முஸ்லீம்கள் போராட்டம்-தடியடி
வேலூர்: தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் படத்தால் கொதிப்படைந்த முஸ்லீம்கள் வேலூரில் உள்ள அந்த நாளிதழ் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். அப்போது சிலர் கல்வீச்சில் இறங்கியதால், போலீஸார் தடியடி நடத்தினர்.
தமிழ் நாளிதழ் ஒன்றில் திங்கள்கிழமைதோறும் வெளியாகும் கம்ப்யூட்டர் மலர் என்கிற இலவச இணைப்பில் நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் இடம் பெற்றிருந்தது.
இதனால் வேலூரில் உள்ள முஸ்லீம் அமைப்பினர் கொதிப்படைந்தனர். இன்று காலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் அந்த பத்திரிக்கையின் அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கார்ட்டூன் இடம் பெற்றிருந்த இலவச இணைப்பை தீயிட்டுக் கொளுத்தி, நாளிதழ் நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். அப்போது சிலர் கல்வீச்சில் இறங்கினர்.
இதையடுத்து போலீஸார் அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். இருப்பினும் முஸ்லீம்கள் அங்கிருந்து கலையாமல் தொடர்ந்து திரண்டுள்ளனர். இதையடுத்து அவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியிலும் கார்ட்டூன் படத்திற்கு கண்டனம் தெரிவித்து கடையடைப்பு நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications