கோபால் தொடர்ந்த வழக்கு-தள்ளுபடி கோரி ஜெ.மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நக்கீரன் ஆசிரியர் கோபால் தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனு செய்துள்ளார்.

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தனக்கடத்தல் வீரப்பன் கடத்தியது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேட்டியளித்திருந்தார்.

இந்த சம்பவத்தில் தன்னை சேர்த்து ஜெயலலிதா கூறியுள்ளார் என்றும், இதனால் தனது நன்மதிப்பு பாதிக்கப்படுகிறது என்று கூறி ஜெயலலிதா மீது நக்கீரன் கோபால் அவதூறு வழக்கை தொடர்ந்தார். அதில் தனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், வழக்கு நீதிபதி ஜெயபால் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜெயலலிதா சார்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொதுமக்களின் நலன் கருதிதான் பேட்டி அளித்தேன். சந்தனக் கடத்தல் வீரப்பன் தற்போது உயிரோடு இல்லாததால் இந்த வழக்கு தேவையற்றது.

அவதூறை ஏற்படுத்தும் வகையில் நான் எந்த கருத்தையும் கூறவில்லை என்று மனுவில் கூறியிருந்தார்.

இதையடுத்து இதற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு நக்கீரன் கோபாலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+