'ஹவாலா': போலி கரன்சியுடன் முதியவர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையிலிருந்து ஜெட்டா செல்வதற்காக வந்த 55 முதியவரிடம் ரூ. 50 லட்சம் கள்ள நோட்டுக்களை போலீஸார் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டனத்தைச் சேர்ந்தவர் அபுல் ஹசன். இவர் நேற்று பெரிய டிராவல் பேக்குடன், சென்னை விமான நிலையம் வந்தார். சென்னையிலிருந்து ரியாத் செல்லும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்கவிருந்தார்.

அப்போது அவரது பையை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.

இந்தப் பணத்தை ஜெட்டாவில் உள்ள ஹஜ் யாத்ரீகர்களுக்கு சாப்பாடு உள்ளிட்ட வசதிகள் செய்துதருவதற்காக கொண்டு செல்வதாக அபுல் ஹசன் தெரிவித்தார். ஆனால் தனி நபர் ஒருவர் இந்திய மதிப்பில் 5000 ரூபாய் மட்டுமே கையில் கொண்டு செல்ல முடியும் என அதிகாரிகள் அவரிடம் கூறியபோது அதுகுறித்துத் தெரியாது என்றார் ஹசன்.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளும் விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். அப்போது ஹசன் வைத்திருந்தது கள்ள நோட்டுக்கள் என்பது தெரிய வந்தது. ஹசன், ஹவாலா வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+