தீர்வை நோக்கி டாடா நானோ ஆலை பிரச்சனை?

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் அமையவுள்ள டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலைக்கு தரப்பட்ட சுமார் 1,000 ஏக்கரில் விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி வாங்கப்பட்ட 400 ஏக்கரை திரும்பத் தர வேண்டும் என்று கோரி திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தி வருகிறார்.
இதையடு்த்து சிங்கூரை விட்டே வெளியேறுவதாக டாடா நிறுவனம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி இறங்கி வந்தார். இந்த விவகாரத்தில் நிலத்தை கையப்படுத்திய மாநில அரசுடன் பேச்சு நடத்தவும் முன் வந்தார்.
மம்தா-அரசு தரப்பு பேச்சு நடத்த மேற்கு வங்க ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி தான் முயற்சி எடுத்தார். நேற்று கடும் இழுபறிக்குப் பின் பேச்சுவார்த்தை தொடங்கியது.
இதில் மம்தா சார்பில் அவரது கட்சியின் மூத்த எம்பிக்களும், கட்சியின் விவசாய அணியினரும், அரசின் சார்பில் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இன்றும் பேச்சு தொடர்ந்து கொண்டுள்ளது.
இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதில் விவசாயிகளுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்கவும், அரசு தனது நிலத்தில் 44 ஏக்கரை டாடாவுக்கு வழங்கவும் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
அதே போல 400 ஏக்கரை திரும்பத் தர வேண்டும் என்று கோரிய மம்தா தரப்பு, 250 ஏக்கரை திருப்பித் தந்தால் போதும் என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications