காஷ்மீரில் இஸ்லாமிய தீவிரவாதமா?-ஜெவுக்கு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்
சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத், துணைத் தலைவர் பக்கீர் முகம்மத் அல்தாபி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
முஸ்லிம் மக்களை வேதனை அடைய செய்யும் வகையில் ஜெயலலிதா தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த காலத்தில் காஷ்மீரில் இஸ்லாமிய மத தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பண்டிட்களுக்கும் நிவாரண உதவி வேண்டும் என்று அதில் கூறியிருக்கிறார்.
காஷ்மீரில் நடப்பது ஏன் இஸ்லாமிய தீவிரவாதம் என்று சாயம்பூச வேண்டும்.
இஸ்லாத்துக்கும், அதற்கும் சம்பந்தமில்லை. அங்குள்ள தீவிரவாத குழுக்களுக்கு, இந்துக்கள், கிருஸ்தவர்கள், முஸ்லிம்கள், பெளத்தர்கள் என்ற வேறுபாடு இல்லை.
மேலும் அங்கு நடக்கும் வன்முறையால் முஸ்லிம்கள்தான் அங்கு அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
எனவே, ஜெயலலிதா இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறியிருப்பதை முஸ்லிம் மக்கள் சார்பிலும், தவ்ஹீத் ஜமாத் சார்பிலும் வன்மையாக கண்டிக்கிறோம்.
அவர் கூறிய கருத்துக்கு மன்னிப்பு தெரிவித்து, திரும்ப பெறாவிட்டால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்றனர்.












Click it and Unblock the Notifications