இந்தியா மீது போர் தொடுக்க தயாராகும் பாக்: ஒபாமா
வாஷிங்டன்: தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவதற்காக அமெரிக்கா வழங்கும் நிதி உதவிகளை பயன்படுத்தி இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தான் தயாராகி வருவதாக குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவதற்காக பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், தீவிரவாதம் இல்லாத சொர்க்க பூமியாக மாற்றுவதற்கு பாகிஸ்தான் நிர்பந்திக்கப்படும். ஆப்கானிஸ்தானை ஒருபுறம் கண்காணித்தாலும், தீவிரவாத விஷயத்தில் பாகிஸ்தானுக்கும் நிர்பந்தம் கொடுக்க வேண்டும்.
அமெரிக்கா வழங்கும் ராணுவ உதவிகளை வைத்து, இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தான் தயாராகி வருகிறது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் உதவிகளை அமெரிக்கா கண்காணிப்பதில்லை. இதனால் உதவிகளை தவறாக பயன்படுத்தி வருகிறுது பாகிஸ்தான்.
தீவிரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஒசாமா பின்லேடனை நரகத்திற்கு அனுப்புவேன்.
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கு தேவையான கூடுதல் ராணுவ உதவிகளை செய்ய வேண்டும். பாகிஸ்தானில் ஜனநாயகம் தழைக்க உதவ வேண்டும். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கூற வேண்டும். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இல்லாத சொர்க்க பூமியாக மாற்ற, முஷாரப் ஆட்சியில் அமெரிக்க வழங்கிய நிதி வீணாகிவிட்டது என்றார்.