மார்த்தாண்டத்தில் மணல் கடத்திய 40 லாரிகள் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நாகர்கோவில் அடுத்த மார்த்தாண்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 40 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட ஆற்றுப்படுகையில் அரசு அனுமதியின்றி சில சமூக விரோதிகள், சில அரசு அதிகாரிகள் உதவியுடன் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் சுமார் 500 லாரிகள் மூலம் மணல் கடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தாசில்தார் பார்வதி தலைமையில் வருவாயத்துறை அதிகாரிகள், மார்த்தாண்டத்தில் மணல் லாரிகளை மடக்கி திடீர் சோதனை செய்தனர். அப்போது 40க்கும் மேற்பட்ட லாரிகள் அரசு அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து அந்த லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளர்களே மணல் கடத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறி்த்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அரசு அனுமதி பெற்ற தனியார் ஒப்பந்தக்காரர்கள் முறைகேடு செய்வதை கண்டித்து சில தினங்களுக்கு முன்பு மணல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்தனர். ஆனால் இப்போது லாரி உரிமையாளர்களே மணல் கடத்தல் முறைகேடுகளில் சிக்கியுள்ளது குறிப்பிடதக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+