மின் தடையை எதிர்த்து பாஜக 11 நாள் போராட்டம்
சென்னை: தமிழகத்தில் நிலவும் மின் தடையைக் கண்டித்தும், மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ராஜினாமா செய்யக் கோரியும், செப்டம்பர் 10ம் தேதி முதல் 20ம் தேதிவரை 11 நாட்களுக்கு ஆர்ப்பாட்டம், தர்ணா ஆகிய போராட்டங்களை நடத்தப் போவதாக மாநில பாஜக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சார விநியோகத்தை சரி செய்யும் முயற்சிகளை விட்டு விட்டு, மின் தடைக்கான காரணத்தை சொல்லிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
மின் தடையால் உற்பத்தித் துறை மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
எனவே தமிழக அரசின் திறமையற்ற போக்கைக் கண்டித்தும், மின் தடையை நீக்கக் கோரியும், மின்சாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்யக் கோரியும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டங்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications