ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு 27ம் தேதிக்கு தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை வருகிற 27ம் தேதிக்கு ஒத்து வைத்துள்ளது பெங்களூர் தனி நீதிமன்றம்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதி மனோலி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் ஆச்சார்யா ஆஜரானார். ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஜெயலலிதா உள்பட 4 பேர் சார்பில் தனித்தனி மனுக்களை தாக்கல் செய்தார். நீதிமன்றத்தில் ஆஜராகததற்கான காரணங்களை அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 27ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி கூறினார்.












Click it and Unblock the Notifications