என்.எல்.சி ஒப்பந்த ஊழியர்கள் ஸ்டிரைக்-மின் உற்பத்தி பாதிக்கும்

தமிழகம் மின்வெட்டால் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது. பல மாவட்டங்கள் பெரும்பாலான நேரம் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இந்த நிலையில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் மின் உற்பத்தி கடும் பாதிப்பை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.
பணியின்போது உயிர்ப் பாதுகாப்பு, பணியின்போது உயிரிழந்தால் அந்தத் தொழிலாளரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 13,000 ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கங்கள் நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து நேற்று இரவு ஒப்பந்த தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் என்.எல்.சி. நிர்வாகம் பேச்சு நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி இன்றுகாலை வேலைநிறுத்தம் தொடங்கியது. இதனால் மின் உற்பத்தி கடும் பாதிப்பை சந்திக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications