மீனம்பாக்கத்தில் போலந்துக்காரர் கைது-கரன்சி பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் போலந்து நாட்டுக்காரர் ஒருவரைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து ரூ. 45 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையத்திற்கு போலந்து நாட்டைச் சேர்ந்த போட்ரிக் (41) என்பவர் வந்தார். அங்கிருந்து சிங்கப்பூர் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர் பயணிக்கவிருந்தார்.
அவர் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர் வைத்திருந்த சூட்கேஸை சோதனையிட்டனர்.அப்போது அதில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மற்றும் யூரோ பணம் இருந்தது தெரிய வந்தது.
இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று அவரிடம் விசாரித்தபோது முறையாக அவர் பதில் சொல்லவில்லை.
இந்திய மதிப்பில் அவற்றின் மதிப்பு ரூ. 44.80 லட்சமாகும். அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீஸாரிடம் போடரிக்கை ஒப்படைத்தனர். போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
சுற்றுலா விசா மூலம் போடரிக் இந்தியா வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் ஹவாலா வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications