For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செப். 15 முதல் ரூ.1க்கு கிலோ அரிசி திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தை முதல்வர் கருணாநிதி, அண்ணா பிறந்த நூற்றாண்டான செப்டம்பர் 15ம் தேதியன்று தொடங்கி வைக்கிறார்.

ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் நடைபெறும் விழாவில் இந்தத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

செப்டம்பர் 16ம் தேதியன்று சென்னை நகரில் உள்ள மற்ற 13 சட்டசபைத் தொகுதிகளிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மத்திய, மாநில அமைச்சர்கள் இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நிதியமைச்சர் அன்பழகன் தனது துறைமுகம் தொகுதியிலும், ஆற்காடு வீராசாமி அண்ணா நகரிலும், மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கிலும் திட்டத்ைத தொடங்க வைப்பார்கள்.

மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு சைதாப்பேட்டையிலும், ஏ.ராஜா பெரம்பலூரிலும், ரகுபதி நாகப்பட்டனத்திலும், பழனிமாணிக்கம் புதுக்கோட்டையிலும், வேங்கடபதி தர்மபுரியிலும், சுப்புலட்சுமி ஜெகதீசன் கிருஷ்ணகிரியிலும் தொடங்கி வைப்பார்கள்.

இந்த திட்டத்தால் 1.86 கோடி ரேஷன்கார்டுதாரர்கள் பலன் அஏடைவர். அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 400 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர், கிலோ அரிசியின் விலை ரூ. 3.50 ஆக இருந்ததை ரூ. 2 ஆக குறைத்தது. மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படும் எனவும் அறிவித்தது. தற்போது கிலோ அரிசியின் விலையை அதிரடியாக ரூ. 1 ஆக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X