காவல் நிலையம் சூறை-15 வக்கீல்கள் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற காவல் நிலையத்தை சூறையாடியதாக 15 வக்கீல்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்திருந்த ஹேபியஸ் கார்பஸ் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கு தொடர்பாக ஆஜராக வந்திருந்த சேலம் கான்ஸ்டபிள் ஒருவரை வக்கீல்கள் 3 பேர் சேர்ந்து ஓட ஓட விரட்டி அடித்தனர்.

நீதிபதி கண் முன்பாகவே இந்த சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த வக்கீல்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர் போலீஸார்.

ஆனால் போலீஸால் பொய் வழக்குப் போடுவதாக உயர்நீதிமன்ற வக்கீல்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று இதைக் கண்டித்து அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது பெரும் திரளான வக்கீல்கள் உயர்நீதிமன்ற காவல் நிலையத்திற்குள் புகுந்து காவல் நிலையத்தை சூறையாடினர்.

முதல் தகவல் அறிக்கைகள் அடங்கிய கோப்புகளை கிழித்து வீசி எறிந்து ரகளை செய்தனர்.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்க செயலாளர் மோகன கிருஷ்ணன், ரஜினிகாந்த், லிங்கம், காமராஜ் உள்ளிட்ட 15 வக்கீல்கள் மீது 147, 148, 506(2) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+