கணவரை தாக்கிய மனைவி, சகோதரி கைது
சென்னை:குடும்பத் தகராறு காரணமாக கணவரை உருட்டுக் கட்டையால் தாக்கிய மனைவியையும், அவருடைய சகோதரியையும் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை யானைகவுனி கல்யாணபுரம் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (30). இவரது மனைவி மலர் (38). மலரின் 4வது கணவர் கோபி என்று கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு அதே பகுதியில் வசிக்கும் தனது சகோதரி சியாமளாவின் (42) வீட்டிற்கு மலர் சென்றார்.
இதையடுத்து மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக நேற்று சியாமளாவின் வீட்டிற்கு கோபி சென்றார். அப்போது அங்கு கோபிக்கும், மலருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.
இதனால் ஆத்திரமடைந்த மலரும், அவரது சகோதரியும் சியாமளாவும் சேர்ந்து உருட்டுக் கட்டையால் கோபியை தாக்கியுள்ளனர். இதில் கோபி படுகாயமடைந்தார்.
இதையடுத்து அரசு பொது மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மலரையும், சியாமளாவையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications