எதிர்ப்பவர்களையும் பின்பற்ற வைத்தது திமுக: கனிமொழி
திண்டுக்கல்:எதிர்ப்பவர்களையும் தனது கொள்கைகளை பின்பற்றச் செய்ய வைத்ததுதான் திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார் எம்பி கனிமொழி.
திண்டுக்கல்லில் நடந்த தொமுச நிர்வாகி தண்டபாணி இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
தற்போது புதிதாக பலர் கட்சி தொடங்குகின்றனர். இவர்களை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. காரணம், விரைவில் பேச வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கமாட்டார்கள். எமர்ஜென்சி காலகட்டத்தில் பொதுக் கூட்டங்கள் நடத்த தடை இருந்தது. அந்த நிலையில் திருமண மேடைகள்தான் கட்சியின் கொள்கைகள் பற்றி பேசும் இடமாக இருந்துள்ளது.
திராவிட இயக்கங்கள் நடத்திய சுயமரியாதை திருமணங்கள் பெண்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டுள்ளது. திமுக தலைவருக்கு அனைவரும் தோழமையுடனும், உறுதியுடனும் ஆதரவாக இருப்பதால்தான் இந்த கட்சி உறுதியாக உள்ளது.
பெரியார், அண்ணா ஆகியோரின் கனவை நினைவாக்கி வரும் ஒரே தலைவர் கருணாநிதி தான். எதிர்ப்பவர்களையும் திமுகவின் கொள்கைகளை பின்பற்றச் செய்ய வைத்ததுதான் திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்றார்.












Click it and Unblock the Notifications