அரவாணிகள் குறித்த கணக்கெடுப்பு-அரசு உத்தரவு
திருச்சி: தமிழகத்தில் உள்ள அரவாணிகள் குறித்த கணக்கெடுப்புக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கணக்கெடுப்பு முடிந்த பின்னர் அவர்களின் சமூக, பொருளாதார நிலை மேம்பாட்டுக்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்படும் என மாநில சமூக நல வாரியத் தலைவர் ரொக்கையா மாலிக் (கவிஞர் சல்மா) தெரிவித்துள்ளார்.
திருச்சி வந்த அவர் அங்கு மாவட்ட அரவாணிகள் கணக்கெடுப்பு தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், அரவாணிகள் குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
முறையான கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் அரவாணிகளையும் சமூகத்தின் மற்ற பிரிவினரோடு சமத்துவமாக ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம்.
சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் அவமரியாதைகள், தொந்தரவுகள் உள்ளிட்டவை குறித்து அரசு பரிவுடன் கவனிக்கும்.
இதன் ஒரு முயற்சியாகவே அரவாணிகளுக்கென தனி நல வாரியம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது அரவாணிகள் கணக்கெடுப்புக்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications