14ல் திருச்சி-நெல்லை, சென்னை சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் இருந்து நெல்லை மற்றும் சென்னைக்கு வரும் 14ம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் திருச்சியில் இருந்து நெல்லை மற்றும் சென்னை எழும்பூருக்கு வரும் 14ம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
திருச்சியில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 11.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
திருச்சி-சென்னை சிறப்பு ரயில் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.15 மணிக்கு எழும்பூரை சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications