காபூல் இந்திய தூதரகம் மீதான தாக்குதல்: 'பாக். தளபதிக்கு தெரியும்'!
நியூயார்க்: காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீதான தீவிரவாத தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கியானி உள்ளிட்ட பாகிஸ்தான் தலைவர்களுக்கு முன்கூட்டியே தெரியும் என அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் அமெரிக்க உளவுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், காபூலில் இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து அமெரிக்க உயர் தலைவர்களுக்கு முன்கூட்டியே தெரியும். பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானியும் அவர்களில் ஒருவர்.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐக்கும் தொடர்பு இருக்கும் என நம்ப வலுவான காரணங்கள் உள்ளன.
கயானிக்கு இது தெரியாது என்று சொன்னால் அதை யாரும் நம்ப முடியாது. நம்பவும் வாய்ப்பில்ைல.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அப்பிராந்தியத்தில் தனது நிலையை வலுவாக்கிக் கொள்ள தீவிரவாத அமைப்புகளின் உதவி தேவை என்று பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நினைக்கிறார்கள்.
இதை விட முக்கியமாக, காபூல்தாக்குதலில் ஐ.எஸ்.ஐக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தாலும் கூட கவலை இல்ைல என்றும் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் நினைக்கின்றனர். எதையும் மறைக்க அவர்கள் விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க உளவுத்துறை முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications