கட்சி மாறி ஓட்டு 2 எம்.பிக்கள் பதவி பறிப்பு
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்த, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த இரு எம்.பிக்களின் பதவியை பறித்து லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன்லாலின் மகன் குல்தீப் பிஷ்னோய். இவர் தனது தந்தையுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, தந்தை தொடங்கிய புதிய கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இதேபோல உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடிக் கட்சி எம்.பி. ஜெயப்பிரகாஷ் ராவத். இவரும் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டு வந்தார்.
கடந்த ஜூலை 22ம் தேதி லோக்சபாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இவர்கள் இருவரும் கட்சி கொறடா உத்தரவை மீறி, மாறி வாக்களித்தனர்.
இதுகுறித்து லோக்சபா சபாநாயகரிடம் இரு கட்சிகளும் புகார் கொடுத்திருந்தன. இரு எம்.பி.க்களின் பதவியையும் பறிக்க வேண்டும் என்று அவை கோரியிருந்தன.
இதுகுறித்துப் பரிசீலித்து வந்த சபாநாயகர், தற்போது இரு எம்.பி.க்களின் பதவியையும் பறித்து உத்தரவிட்டுள்ளார். பிஷ்னோய் கடந்த 10ம் தேதியிலிருந்தும், ராவத் 11ம் தேதி முதலும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications