அணு ஒப்பந்தம்: முட்டுக்கட்டை போடும் யு.எஸ். எம்.பிக்கள்!
வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்ைத அவசர கதியில் நிறைவேற்றக் கூடாது என்று சில மூத்த ஜனநாயகக் கட்சி எம்.பிக்கள் கோரியுள்ளதால், நாடாளுமன்றத்தில், ஒப்பந்தம் சுமூகமான முறையில் நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மாசசூசட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் (எம்.பிக்கள்) எட்வர்ட் மார்க்கி தலைமயிலான 3 பேர் கொண்ட மூத்த ஜனநாயகக் கட்சி எம்.பிக்கள்தான் இந்த போர்க்கொடியைத் தூக்கியுள்ளனர்.
மார்க்கி கூறுகையில், இந்த ஒப்பந்தம் குறித்து நிறைய கேள்விகளுக்குப் பதில் இல்லை. மேலும் விளக்கம் தேவைப்படுகிறு. எனவே நாடாளுமன்றம், அவசர கதியில் இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி தரக் கூடாது. அவசரம் காட்டக் கூடாது என்றார்.
நேற்றுதான் செனட் சபாநாயகர் நான்சி பெலோசி, அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அனுமதி தருவதற்காக விதிமுறைகள் தளர்த்தப்படலாம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த எதிர்ப்புகிளம்பியுள்ளது.
கலிபோர்னியா ஜனநாயக எம்.பி எல்லன் டாஸ்சர், ஜான் ஸ்பிராட் ஆகியோரும் மார்க்கியுடன் இணைந்து குரல் கொடுத்துள்ளனர்.
இவர்கள் மூன்று பேரும் நாடாளுமன்ற வெளியுறவு விவகார கமிட்டி தலைவர் ஹோவர்ட் பெர்மானுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அவசர கதியில் ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி தரக் கூடாது என்று கோரியுள்ளனர்.
பெர்மான்தான், புஷ் நிர்வாகம் தனக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டு இந்தியாவில் புயலைக் கிளப்பியவர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications