டெக்ஸாஸ் கடலோரத்தை தாக்கியது இகே சூறாவளி
ஹூஸ்டன்: மிகப் பெரிய சூறாவளியான இகே, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண கடலோரப்ப குதியை இன்று பலத்த காற்றுடன் தாக்கியது. இதையடுத்து அங்கிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
மெக்ஸிகோ வளைகுடாவில் தொடங்கி கியூபா, ஹைதி உள்ளிட்ட நாடுகளைத் தாக்கிய இகே தற்போது அமெரிக்காவின் கடலோர மாகாணங்களைத் தாக்கத் தொடங்கியுள்ளது.
பலத்த காற்றுடன் டெக்ஸாஸ் கடற் பகுதியை இகே இன்று தாக்கியது. ஏற்கனவே கடந்த சூறாவளி காரணமாக இப்பகுதியின் பல இடங்களில் புகுந்த கடல் நீர் இன்னும் வெளியேறாமல் உள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
சூறாவளி தாக்கியதன் காரணமாக பலத்த மழையும், கடும் காற்றும் அடித்துக் கொண்டிருக்கிறது. பல பகுதிகளில் கடல் நீர் உள்ளே புகுந்து வெள்ளக்காடாகியுள்ளது. பல எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. அங்கெல்லாம் தண்ணீர் புகுந்துள்ளது.
மணிக்கு 966 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. வட கிழக்கு நோக்கி இந்த சூறாவளி தற்போது நகர்ந்து வருகிறது. இன்று மாலை கால்வெஸ்டன் பகுதியை அது கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இகே தாக்குதல் குறித்து ஓக்லஹாமா சிட்டியில் பேசிய அதிபர் ஜார்ஜ் புஷ் கவலை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications