தமிழக மக்கள் கல்வி பெற காரணம் காமராஜர்: ஸ்டாலின் புகழாரம்
விருதுநகர்: தமிழகத்தில் எல்லோரும் கல்வி பெற மூல காரணமாக இருந்தவரே காமராஜர்தான் என்று காமராஜருக்கு புகழாரம் சூட்டினார் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின்.
விருதுநகரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஸ்டாலின், காமராஜர் கல்வி கருவறையை திறந்து வைத்தார். பின்னர்
அவர் பேசுகையில், அரசியலில் கிங்மேக்கராக திகழ்ந்த காமராஜர் தன் வாழ்க்கை முழுவதையும் கல்விக்காகவே அர்ப்பணித்தவர். நாட்டின் பிரதமர்களை உருவாக்கும் அளவுக்கு தன் திறமையையும், தகுதியையும் வளர்த்துக் கொண்டவர்.
தமிழகத்தில் எல்லோரும் கல்வி பெற மூல காரணமாக இருந்தவரே காமராஜர்தான். கல்விக்கண் திறந்த திறந்த காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்து பெருமை சேர்த்துள்ளார்.
விழாவில் பேசிய நகரசபை தலைவர், காமராஜர் பெயரில் உள்ள புதிய பஸ் நிலையம் உடனே செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
விருதுநகருக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகின்ற வேளையில், இந்த பஸ் நிலைய பிரச்சினையையா கவனிக்காமல் விட்டு விடுவோம். விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications