கிழக்கு தைமூரில் கடலுக்கடியில் கடும் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா: இந்தோனேசியா அருகில் உள்ள கிழக்கு தைமூரில் கடலுக்கடியில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் வெளியாகவில்லை.
இந்தோனேசியா அருகில் உள்ள கிழக்கு தைமூருக்குச் சொந்தமான குபாங் என்ற இடத்திற்கும், தலைநகர் திலிக்கும் இடையே கடலுக்கடியில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் அளழு 6.2 ரிக்டராக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்ைக எதுவும் விடப்படவில்லை. சேத விவரம் குறித்து உடனடியாக தெரிய வரவில்லை.
இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 5.30 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications