3 வயது குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
கரூர்: மூன்று வயது குழந்தையோடு தீக்குளித்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் வெங்கேமேடு கொங்கு நகரை சேர்ந்த எல்ஐசி ஏஜெண்ட் செந்தில்குமார் (33). இவரது மனைவி சொர்ணவல்லி. இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. இவர்களது மகள் ஜெயசீலி (3). செந்தில்குமாரின் பெற்றோர்களும் உடன் வசித்து வருகின்றனர்.
கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. நேற்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குழந்தை ஜெயசீலியை தூக்கிக் கொண்டு பாத்ரூமுக்கு சென்றார் சொர்ணவல்லி. குழந்தை மீதும் தன் மீதும் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டனர்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். நீண்ட நேரம் போராடி பாத்ரூம் கதவை திறந்தனர். அதற்குள் இருவரும் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் தொடர்பாக குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications