For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோலாரில் சர்ச் மீது தாக்குதல் - மாதா சிலை உடைப்பு

By Staff
Google Oneindia Tamil News

கோலார்: கர்நாடக மாநிலம் கோலாரில் இன்று காலை புராட்டஸ்டன்ட் பிரிவு சர்ச் ஒன்றை மர்ம கும்பல் தாக்கி சேதப்படுத்தியது.

கர்நாடகத்தில் மங்களூர் பகுதியில் சர்ச்கள் மீது பஜ்ரங் தள அமைப்பைச் சேர்ந்தவர்கள் சர்ச்கள் மீது தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த மோதல் தற்போது கோலார் மாவட்டத்திற்கும் பரவியுள்ளது. கோலார் நகரில் உள்ள 45 ஆண்டு கால பழமை வாய்ந்த செயின் மேரி சர்ச் மீது இன்று காலை ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.

அதிகால 4 மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது. இதில் மேரி மாதாவின் சிலை சேதமடைந்தது.

இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சர்ச்சுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் பதட்டம் நீடிப்பதாகவும் தகவல்கள் ெதரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X