For Daily Alerts
Just In
இடைத்தேர்தல்: மக்களை மிரட்டும் திமுகவினர்-சிபிஎம் புகார்
மதுரை: மதுரை மாநகராட்சி இடைத் தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கும்படி மக்களை மிரட்டுவதாக திமுகவினர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சியின் 52வது வார்டுக்கு இன்று இடைத் தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் தேர்தல் பார்வையாளர் பிரேம்குமாரிடம் சிபிஎம் வேட்பாளர் உதயசூரியன் புகார் தெரிவித்துள்ளார்.
அதில், 52வது வார்டுக்கான இடைத் தேர்தலில் சிபிஎம் சார்பில் நான் போட்டியிடுகிறேன். வார்டு மக்களிடம் நேரடியாக சென்று வாக்குகள் சேகரித்து வருகிறேன்.
ஆனால் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அக்கட்சியின் சின்னமான உதயசூரியனில்தான் வாக்களிக்க வேண்டும் என அச்சுறுத்தி வருகின்றனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
Comments
Story first published: Thursday, September 18, 2008, 12:38 [IST]