அமைச்சர் வீராசாமி பெயரில் மிரட்டல் - புகார் கூறியவரின் வக்கீல் கைது
சென்னை: அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் அடியாட்கள் மிரட்டியதாக போலீஸில் புகார் கொடுத்த நபரின் வழக்கறிஞரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகேசன். கட்டடத் தொழிலாளியான இவர் கடந்த 50ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை வாங்கிய நிலத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் ரூ. 25 கோடி மதிப்புள்ள இந்த இடத்தை சந்திரசேகர் என்பவர் ஆக்கிரமிக்க முயல்வதாகவும், அவர் அனுப்பிய ஆட்கள் வீட்டில் வந்து சுற்றுச்சுவரை இடித்தும், மரங்களை வெட்டியும் மிரட்டியதாகவும், இதுகுறித்து தட்டிக் கேட்டபோது, அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் உத்தரவுப்படி தாங்கள் வந்துள்ளதாக கூறி மிரட்டியதாகவும் போலீஸில் புகார் கொடுத்தார் முருகேசன்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்தப் புகாரை திட்டவட்டமாக மறுத்தார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸாருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார்.
அதில், எனக்கும், இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் இல்லை. அரசியல் உள்நோக்கத்தோடு இந்த புகார் கூறப்பட்டுள்ளது. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் இது. இதுகுறித்து முருகேசன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென முருகேசனின் வழக்கறிஞர் எழில் கைது செய்யப்பட்டார்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications