பாக்: 300 மாணவர்களை சிறை பிடித்த தீவிரவாதிகள்
இஸ்லாமாபாத்: தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழும் வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள திர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருடன் பள்ளிக்கூடம் ஒன்றை தீவிரவாதிகள் சிறை பிடித்துள்ளனர்.
இன்று காலை இந்தப் பள்ளிக்குள் அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகள், துப்பாக்கி முனையில் தங்களது கட்டுப்பாட்டுக்குள் பள்ளியை கொண்டு வந்தனர். அந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்
உள்ளனர்.
தீவிரவாதிகளின் செயலால் அதிர்ச்சியுற்ற உள்ளூர் மக்கள் பள்ளிக்குள் நுழைய முயன்றனர். ஆனால் அவர்களை துப்பாக்கியால் சுட்டு தீவிரவாதிகள் விரட்டி விட்டனர்.
திர் மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிலவுவதால் அவர்கள்தான் பள்ளியை சிறைபிடித்திருப்பதாக தெரிகிறது.
இங்கு ராணுவத்தின் கை தாழ்ந்திருப்பதால் பள்ளிக்கூடத்தையும், அதில் உள்ள மாணவ, மாணவியரையும் மீட்க ராணுவம் நடவடிக்ைககளை எடுத்து வருகிறது.