சென்னை, மதுரை உள்ளாட்சி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: அதிமுக புறக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மற்றும் மதுரையில் நடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலின்போது திமுகவினர் நடத்திய அராஜகத்தையும், வன்முறையையும் கண்டிக்கும் வகையில் வாக்கு எண்ணிக்கையை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றம் சென்னையில் வார்டு எண் 18 மற்றும் 44 ஆகியவற்றில் நடைபெற்ற இடைத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கள்ள ஓட்டுப் போட அனுமதிக்கக் கூடாது, முறைகேடுகள் நடைபெறக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.

இருப்பினும் சென்னையில் 2 வார்டுகளிலும், மதுரையில் ஒரு வார்டுக்கும் நடந்த இடைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது திமுகவினர் அராஜகம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில் பெருமளவில் கள்ளஓட்டுக்கள் போடப்பட்டுள்ளன. இதை தடுக்காமல் காவல்துறையினர் வேடிக்கை பார்த்துள்ளனர்.

எனவே முறைகேடாக வாக்குப்பதிவு நடந்த இந்த வார்டுகளில் மறு வாக்குப் பதிவு நடத்த சட்டப்படியான நடவடிக்ைககளை அதிமுக மேற்கொள்ளும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+