For Daily Alerts
Just In
ஒரு சிலிண்டர் - இணைப்பு இல்லாதவர்களுக்கு கூடுதல் கெரசின்
சென்னை: ஒரு சிலிண்டர் மட்டும் வைத்திருப்போர் மற்றும் காஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு கூடுதலாக ஒரு லிட்டர் மண்ணெண்ணை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரு காஸ் சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள் மற்றும் காஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாத, தகுதியுள்ள புதிதாக வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தலா 3 லிட்டர் வீதம் பொது விநியோகத் திட்டத்தில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது வழக்கத்தை விட கூடுதலாக ஒரு லிட்டர் வழங்கப்படுகிறது.
அதுபோல வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களுக்கும் கூடுதலாக ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் என என்று அரசு உத்தரவிட்டுள்ளதாக உணவுத் துறை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Sunday, September 21, 2008, 14:31 [IST]