For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வன்முறையை வேரோடு வீழ்த்துவோம்: ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: சர்வதேச அமைதி நாளான இந்த நாளில் நம் முன்னோர்கள் உயிராய் மதித்த உயர்ந்த சமய நெறிகளுக்கு நம்மையே நாம் மீண்டும் அர்ப்பணிப்போம். வன்முறையை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த நாம் அனைவரும் சபதம் ஏற்போம். ஒருவரையொருவர் சகோதர சகோதரிகளாக போற்றி நேசிக்கும் பண்பை பெறுவோம். அனைவரும் வாழ்வுபெற அமைதிக்கு வாய்ப்பளிப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சர்வதேச அமைதி தினத்தையொட்டி ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

இன்றைக்கு இந்தியா இரக்கமற்ற வர்களின் வன்செயல்களாலும், கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களாலும் சின்னா பின்னப்படுத்தப்பட்டிருப்பதை மிகுந்த மன வேதனையோடு பார்க்கிறோம். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அப்பாவி மக்களின் உயிர்கள் ஒவ்வொரு நாளும் பறிக்கப்படுகின்றன.

மக்கள் கூட்டம் மிகுந்த கடை வீதிகளில் குண்டுகள் வெடிக்கின்றன. ரெயில்களிலும், ரெயில் நிலையங் களிலும், பேருந்து நிலையங்களிலும், இன்ன பிற பொது இடங்களிலும் இத்தகைய வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்த தாக்குதல்களில் பாதிக்கப்படுவோர் எல்லாம் சாதாரண பொதுமக்களே.

யாரையாவது அர்த்தமற்று கொன்று குவிப்பதை எந்த மதமாவது ஏற்குமா? ஆதரிக்குமா? எத்தனையோ நூற்றாண்டுகளாக மதங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்து இந்தியாவில் தழைத்து வந்திருக் கின்றன. ஒன்றுக்கு அடிபணிந்து மற்றொன்று இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதில்லை. இன்றைக்கு ஏன் மற்ற மதத்தினர் மீது இவ்வளவு வெறுப்பு?

சர்வதேச அமைதி நாளான இந்த நாளில் நம் முன்னோர்கள் உயிராய் மதித்த உயர்ந்த சமய நெறிகளுக்கு நம்மையே நாம் மீண்டும் அர்ப்பணிப்போம். வன்முறையை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த நாம் அனைவரும் சபதம் ஏற்போம். ஒருவரையொருவர் சகோதர சகோதரிகளாக போற்றி நேசிக்கும் பண்பை பெறுவோம். அனைவரும் வாழ்வு பெற அமைதிக்கு வாய்ப்பளிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X