திருச்சி செல்லமணி அன் கோவில் பெரும் தீவிபத்து
திருச்சி: திருச்சியில் உள்ள பிரபல செல்லமணி அன் கோவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. ஒன்றரை கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.
சமீபத்தில் சென்னை சரவணா ஸ்டோர்ஸில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு 2 உயிர்கள் பலியாகின. அதேபோல, அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசாவிலும் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. ஆனால்தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டதால் பெரும அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில் திருச்சி சின்னக்கடை வீதியில் உள்ள பிரபலமான செல்லமணி அன் கோ கடையில் இன்று அதிகாலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி இங்கு பெருமளவிலான பொருட்கள் வாங்கி வைக்கப்பட்டு விற்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பெரும்பாலான பொருட்கள் எரிந்து சாம்பலியான.
தகவல் அறிந்து வந்ததீயணைப்புப் படையினர் பெரும் போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். விபத்தில் ரூ. ஒன்றரை கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தீயில் கருகியவை பெரும்பாலும் டிவி, ஏசி மெஷின், பிரிட்ஜ் போன்றவையே ஆகும்.
அருகில் உள்ள பேக்கரியிலிருந்து தீ பரவியதா அல்லது மின்கசிவால் ஏற்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications