நோயாளி மரணம் - ஆபரேஷன் செய்த டாக்டர் மீது வழக்கு
திருவாரூர்: திருவாரூரில் அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து கொண்ட நோயாளி திடீரென்று இறந்ததார். அவருக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர் தென்றல் நகரை சேர்ந்தவர் அபிரானந்தம் (62). எலட்ரானிக் கடை உரிமையாளர். அடிக்கடி வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இதையடுத்து அவர் திருவாரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு பித்தப் பையில் கல் இருப்பது தெரியவந்தது.
இதனால் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அபிரானந்தத்துக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், ஆபேரசன் செய்த டாக்டர்களின் கவனக்குறைவினால்தான் அபிரானந்தம் இறந்து போனார் என்று கூறி அவரது உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்துவிட்டனர்.
தகவலறிந்த திருவாரூர் போலீஸார் அவர்களை சமரசம் செய்தனர். பின்னர் ஆபரேசன் செய்த டாக்டர் சுந்தர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.