திருச்சி சிறையில் கைதிகள் மோதல் - பதட்டம்
திருச்சி: திருச்சி சிறையில் கைதிகள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (27). திருப்பூர் பத்மாவதி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (24). காரைக்குடி பகுதிகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவ வழக்குகள் தொடர்பாக இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நாகராஜின் தங்கைக்கும், பிரகாஷுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே பகை ஏற்பட்டது.
இந்த நிலையில் சிறையில் இருக்கும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து திருச்சி மத்திய சிறை ஜெயிலர் இளவரசன் அளித்த புகாரின்பேரில் கே.கே.நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோதல் தொடர்பாக நாகராஜன், பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications