அக்-1ல் திருப்பதி பிரம்மோற்சவம் தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

திருமலை: திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா அக்டோபர் முதல் தேதி தொடங்குகிறது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

திருப்பதி அருள்மிகு ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த 10 நாள் திருவிழாவில் பக்தி பரவசத்துடன் கலந்து கொள்வார்கள்.

பிரசித்தி பெற்ற இந்த திருவிழா இந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதி கோலாகலமாக தொடங்குகி 9ம் தேதி வரை நடைபெறுகிறது. கோவிலுக்கு தீவிரவாதி அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பை பலப்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, கோவிலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தையும் அலிபிரியில் முழு அளவில் சோதனை செய்யப்படும். இதற்காக அலிபிரியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட உள்ளனற்.

3 கட்ட சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படும். இதற்காக தனித்தனி செக் போஸ்ட்டுகள் அமைக்கப்படுகிறது. திருப்பதி மலையில் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். மேலும் திருப்பதி கோவிலைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபாடுவார்கள்.

திருப்பதி மலையில் தற்போது பக்தர்கள் வசதிக்காக 8 இலவச பஸ்கள் விடப்பட்டுள்ளன. இதன் எண்ணிக்கையை 10ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+