கேரளாவில் 2 சர்ச்கள் மீது தாக்குதல்-பதட்டம்

கொச்சி அருகே உள்ள நெடும்பச்சேரி சர்வதேச விமான நிலையப் பகுதியில் உள்ள அகபரம்பு என்ற இடத்தில் உள்ள இந்த சர்ச்சுகளில் புகுந்து அங்கிருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக கிறிஸ்தவ சமுதாயத்தைச் ேசர்ந்த ஒருவரை போலீஸார் பிடித்துள்ளனர். அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர். அவர்தான் இந்த செயலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும் கேரள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வுப் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த சர்ச்சுகளுக்கு மாநில உள்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் வந்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத நல்லிணக்கத்தை கெடுப்போர் மீது கடும் நடவடிக்ைக எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது.
டி.எஸ்.பி உன்னிராஜன் தலைமையில் சிறப்பு புலனாய்வுப் படை அமைக்கப்பட்டு அந்தக் குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.
கைரேகை நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அனைத்து கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது என்றார் அவர்.
தாக்குதல் நடந்த சர்ச்சுகளில் ஒன்றான ஜேகோபைட் சர்ச்சில் ஜன்னல் கண்ணாடிகள் தகர்க்கப்பட்டுள்லன. மேலும் ஒரு துறவியின் சந்தனத்தால் ஆன கட்டிலும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
அருகில் உள்ள ரோமன் கத்தோலிக் சர்ச்சின் இயேசு நாதர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இது திட்டமிட்ட தாக்குதல் என பிஷப் தாமக் சக்கியாத் கூறியுள்ளார். அரசு இதுபோன்ற செயல்களைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் சக்கியாத்.
பதட்டத்தைத் தணிப்பதற்காக உள்ளூர் போலீஸார், அமைதிக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications