சர்ச் தாக்குதல்: விழுப்புரத்தில் கிறிஸ்தவர்கள் உண்ணாவிரதம்-பேரணி
விழுப்புரம்: ஒரிஸா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தேவாலயங்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து விழுப்புரத்தில் கிறிஸ்துவ அமைப்புகளின் சார்பில் உண்ணாவிரதம், பேரணி நடைபெற்றது.
பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடந்த வாரம் ஒரிஸா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள தேவாலயங்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தின.
இதற்கு விழுப்புரத்தில் உள்ள கிருஸ்தவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து நேற்று உண்ணாவிரதம் மற்றும் பேரணி, பொதுக் கூட்டங்கள் நடத்தின.
உண்ணாவிரதத்திற்கு மறை மாவட்ட தலைமை குரு அந்தோணிச்சாமி தலைமை வகித்தார். இதில், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், வழக்கறிஞர் லூசி, மனித உரிமை இயக்க நிர்வாகி சரோ.வளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இதைத் தொடர்ந்து எம்எல்ஏ புஷ்பராஜ் தலைமையில் ரயில் நிலையத்தில் இருந்து, பொதுக் கூட்ட மைதானத்திற்கு ஊர்வலமாக சென்றனர். பொதுக் கூட்டத்தில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications