மீனாட்சி அம்மன் கோவில்-டிஜிபி நேரில் ஆய்வு

பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்பின்போது மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்களுக்கு தீவிரவாத மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த கோவில்களில் பல கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் கடந்த 13ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்தும் தமிழகத்தில் உள்ள கோவில்களில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எட்டடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் ஷிப்ட் முறையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக சித்திரை வீதிகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
கோவிலின் அனைத்து வாசல்களிலும் டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை டிஜிபி ஜெயின் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார்.
பாதுகாப்பு பணிகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் விசாரித்தார். பின்னர் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார்.












Click it and Unblock the Notifications