கோவை பாஸ்போர்ட் அலுவலகம்-போலி புரோக்கர்கள் கைது
கோவை: கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற்றுத் தருவதாக கூறி மக்களை ஏமாற்றி பணம் வசூலிக்க முயன்ற போலி புரோக்கர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. நீண்டகால கோரிக்கை நிறைவேறியதால் உற்சாகமான மக்கள் பாஸ்போர்ட் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்த மக்களிடம் சென்ற இரண்டு பேர், தாங்கள் பாஸ்போர்ட் பெற்று தருவதாக கூறி பணம் வசூல் செய்ய முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாஸ்போர்ட் அதிகாரி முருகன் மற்றும் அலுவலக ஊழியர்கள் அந்த இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். பின்னர் போலீஸாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
போலீஸார் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள், கோவை குனியமுத்தூரை சேர்ந்த ரங்கநாதன் (41) என்றும், மற்றொருவர் பொள்ளாச்சியை சேர்ந்த நாகூர் மீரான் என்பது தெரியவந்தது. இருவரும் போலி புரோக்கர்கள் என்பதை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications