தேமுதிகவுடன் கூட்டணி: சிபிஐ விளக்கம்
சென்னை: கட்சிகள் சிபிஎம் தலைவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளனர். ஜனநாயகத்தில் யாரையும் புறந்தள்ளி விடமுடியாது என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா.
அவர் கூறியதாவது:
பாஜக, காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்து மாற்று அணியை அமைப்போம். சிபிஎம் தலைவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளனர். விஜயகாந்த்துடன் கூட்டணி வைப்பது குறித்த கேட்கின்றனர். ஜனநாயகத்தில் யாரையும் புறந்தள்ளி விட முடியாது.
சிபிஐ, சிபிஎம், ஆர்எஸ்பி, பார்வர்ட் பிளாக் ஆகிய இடதுசாரி கட்சிகள் தெலுங்க தேசம், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து வரும் 25ம் தேதி கண்டன இயக்கம் நடத்தப்படும். அதே நாளில் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டமும் நடத்தப்படும்.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு கூட்டத் தொடர் இல்லாதது இதுவே முதல் முறையாகும். நாடாளுமன்றத்தை உரிய காலத்தில் நடத்த மத்திய அரசு முன்வரவில்லை. அக்டோபர் 17ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அது மழைக்கால கூட்டத் தொடரா அல்லது குளிர்கால கூட்டத் தொடரா, இரண்டும் இணைந்ததா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.
பீகர், ஒரிஸ்ஸா மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் அணு ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பிரச்சனையில் நாடாளுமன்றத்தை எதிர்கொள்ள மத்திய அரசு பயப்படுகிறது.
நாட்டின் பல நகரங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால் மக்கள் பீதியுடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரிஸ்ஸா, கர்நாடகம் மாநிலங்களில் தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பஜ்ரங் தள், விஎச்பியினர் கைதாகியுள்ளனர். தேர்தல் ஆதாயத்துக்காக பாஜக இதுபோன்ற சம்பவங்கள் நடத்துகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.












Click it and Unblock the Notifications