செங்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் மோதல்-டிஸ்மிஸ்
செங்கோட்டை: அரசு பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவனை சரமாரியாக தாக்கிய பிளஸ் டூ மாணவர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
நூற்றாண்டை நோக்கி செல்லும் மிகப் பழமையான பள்ளியாகும். செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு கல்வி அளித்து வரும் இந்த பள்ளி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு பிளஸ் டூ படிக்கும் இரண்டு மாணவர்கள் மது அருந்தி வி்ட்டு வகுப்பறைக்கு வந்தனர். இதையடுத்து இரண்டு மாணவர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இதையடுத்து சில தினங்களுக்கு முன் இரண்டு மாணவர்கள் மது அருந்திவிட்டு தள்ளாடியபடியே பள்ளிக்கு வந்தனர்.
மாணவர்களின் பைகளை சோதனை செய்தபோது அதில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து இந்த மாணவர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இந்த சம்பவங்கள் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று பிளஸ் டூ படிக்கும் 2 மாணவர்கள், 10ம் வகுப்பு மாணவனை சராமரியாக தாக்கினர். இதை பார்த்த ஆசிரியர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். மோதலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து பள்ளி வாளகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த பள்ளியை சீர்செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோரும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications