For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியா-பேரணியில் பங்கேற்ற தமிழர்களுக்கு அபராதம்

By Staff
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவில் அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றதற்காக 2 தமிழர்களுக்கு தலா ரூ. 12,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஆண்டு தமிழர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி போராட்டம் நடந்தது. இப்போராட்டத்ைத போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

இந்தப் போராட்டம் தொடர்பாக 54 பேர் கைது செய்யபப்ட்டனர். இதுதொடர்பான விசாரணை நடந்து வந்தது. இதில் 27 பேர் 'குற்றத்தை' ஒத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர் (பேரணியில் பங்கேற்றது குற்றம் என்கிறது மலேசிய அரசு) இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ. 12,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இந் நிலையில், ஜெயக்குமார், சிவக்குமார் ஆகிய இருவர் நேற்று 'குற்றத்தை' ஒப்புக் கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களுக்கும் தலா ரூ. 12,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதைக் கட்டத் தவறினால் இருவருக்கும் தலா 3 வார சிறைத் தண்டனை விதிக்கப்படும் என கோலாலம்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X