மெக்கெயினை முந்தினார் பராக் ஒபாமா!
வாஷிங்டன்: பொருளாதாரப் பெருமந்தம் நிலவும் இந்த சூழலில் எடுக்கப்பட்ட ஏ.பி.சி. தொலைக்காட்சி நடத்திய தேர்தல் கணிப்பில் அதிபர் பதவிக்கு மெக்கெயினை விட 9 சதவீத ஆதரவை கூடுதலாகப் பெற்றுள்ளார் அவரது போட்டியாளர் பாரக் ஒபாமா.
அமெரிக்கா கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனங்கள் ஒன்றன பின் ஒன்றாக வீழ்ச்சியடைந்து வருகின்றன.
இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படுகிறதாம் அமெரிக்காவுக்கு.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலுக்கோ இன்னும் 6 வாரங்கள்தான் உள்ளன. இந்த சூழலில் அமெரிக்காவின் பிரபல மீடியாவான ஏபிசி நிறுவனம் இறுதிக்கட்ட தேர்தல் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.
இதில் பாரக் ஒபாமாவுக்கு 52 சதவீத ஆதரவும் புஷ்ஷின் கட்சியைச் சேர்ந்த மெக்கெனுக்கு 33 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.
மெக்கெயினைவிட ஒபாமாவால் இந்த சூழலில் சிறப்பாக செயல்பட முடியும் என்றும், பொருளாதார நெருக்கடியைச் சீர்படுத்தும் கடின நடவடிக்கைகள் எடுப்பதில் ஒபாமா வல்லவர் என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நடத்திய கருத்துக் கணிப்பில் இருவரும் கிட்டத்தட்ட சமமான ஆதரவுடன் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications