விமானக் கட்டணம்... இன்னும் உயரே!
மும்பை: விமானக் கட்டணங்கள் மீண்டும் உயரவுள்ளன.
நாட்டின் மிகப் பெரிய தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் அடுத்த சில தினங்களில் 9 சதவிகிதம் வரை கட்டண உயர்வை அறிவிக்க உள்ளது.
விமானங்களின் எண்ணிக்கை உயர்ந்த அளவுக்கு பயணிகளின் எண்ணிக்கை உயராததால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தைச் சரி கட்டவும், எரிபொருள் செலவைச் சரிகட்டவும், கட்டண உயர்வை உடனடியாக அமலுக்கு கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை என ஜெட் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி ப்ராக் ஸ்காயர் தெரிவித்துள்ளார்.
ஜெட் ஏர்வேஸ் வழியிலேயே மற்ற விமான சேவை நிறுவனங்களும் கட்டண உயர்வை அமல்படுத்தவுள்ளன.
ஆனால் இவை ஜெட்டை விட கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தவிருக்கின்றன.
கடந்த ஆண்டு மட்டும் 7 முறை விமானக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்போது பல விமானங்கள் வெறும் 50 சதவீத பயணிகளுடன்தான் பறக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.