கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்: சர்கோஸி கேள்வி-நெளிந்த மன்மோகன்
பாரீஸ்: இந்தியாவின் சில மாநிலங்களில் கிறிஸ்தவ தேவாலாயங்கள் தாக்கப்பட்டது, கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்து பிரெஞ்சு அதிபர் சர்கோஸி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விளக்கம் கேட்டதால் அவர் தர்மசங்கடத்தில் நெளிய நேரிட்டது.
இந்திய -ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் சென்றுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
திங்கள்கிழமை மார்ஷெல் நகரில் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியை, பிரதமர் மன்மோகன் சிங்சந்தித்தபோது, அவர் இந்தியாவின் சில பகுதிகளில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்து கவலை தெரிவித்து அதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளார். இதனால் நமது பிரதமர் தர்மசங்கடத்தில் மூழ்க நேரிட்டது.
இருப்பினும் பிரான்ஸில் சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதி மறுக்கப்படுகிறதே என்று பின்னர் செய்தியாளர்கள் கேட்டதற்கு இந்தியாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது என்பது வேறு, சீக்கியர்களுக்கு தலைப்பாகை தடை செய்யப்படுவது என்பது வேறு என்று விளக்கம் அளித்தார் சர்கோஸி.
இதுகுறித்து அவர்கூறுகையில், பிரான்ஸ் நாட்டுக்கு தாராளமாக சீக்கியர்கள் வரலாம். ஆனால் பிரான்ஸ் நாட்டின் விதிமுறைகளுக்கு அவர்கள் கட்டுப்பட வேண்டும், அதை மதிக்க வேண்டும்.
அனைவரும் சமம் என்பது பிரான்ஸின் கொள்கை. எனவே அதற்கு அனைவரும் மதிப்பு கொடுக்க வேண்டும். பிரான்ஸில் வாழும் அனைவருக்கும் ஒரே சட்டம்தான், விதிமுறைதான். இதில் யாருக்கும் விதி விலக்கு அளிக்க முடியாது.
சீக்கியர்களை நாங்கள் பாரபட்சமாக நடத்தவில்லை. அவர்களை வரவேற்கிறோம். அவர்களது பாரம்பரியம், பழக்க, வழக்கங்களை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம் அவர்களும் எங்களது விதிமுறைகளை மதிப்பார்கள் என நம்புகிறேன் என்றார் சர்கோஸி.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications