நகைக்காக நர்ஸ் கழுத்தை நெறித்து கொலை
அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சியில் நர்ஸை கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கல்லிடைக்குறிச்சி கேட் வாசல் தெருவை சேர்ந்த தமிழ்செல்வி. மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸாக பணியாற்றினார். இவரது கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். மகன் ராஜேஷ் கண்ணா, கோவையில் இன்ஜினீயரிங் படித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ்செல்வி அவரது வீட்டு மாடியில் நேற்று காலை படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வாயினுள் டவலை திணித்து நைலான் கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் வீட்டு பிரோவில் இருந்த ரூ.1.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். தகவலறிந்த நெல்லை டிஐஜி கண்ணப்பன், அம்பாசமுத்திரம் டிஎஸ்பி ராஜமோகன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications