கல்பாக்கம்: ஆட்டோ-பஸ் மோதல், 5 பேர் பலி
சென்னை: ஷேர் ஆட்டோவும் அரசு பஸ்ஸூம் மோதிக் கொண்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி, அரசு பஸ் ஒன்று நேற்று இரவு 7 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது. சதுரங்கபட்டினத்தை அடுத்த வெங்கபாக்கம் பெருமாள் கோவில் அருகே, சென்று கொண்டிருந்தபோது, பஸ்ஸூக்கு முன்னால் பைக்கில் இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர்.
பைக்கை வேகமாக கடந்து சென்ற பஸ், எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதனால் ஷேர் ஆட்டோ, அப்பளம் போல நொறுங்கியது.
இந்த விபத்தில் கீரப்பாக்கத்தைச் சேர்ந்த உமா (19), கிளியம்மாள் (28) மற்றும் ஷேர் ஆட்டோ டிரைவர் முருகானந்தம் (18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் ஆட்டோ பயணிகள் மணிகண்டன் (20), சரோஜா (18) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு கல்பாக்கம் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு பேர் இறந்தனர். மற்றவர்களின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் குறித்த தகவல் தெரியவில்லை.
ஷேர் ஆட்டோவில் வந்தவர்கள் அனைவரும் காண்டிராக்ட் கூலி தொழிலாளர்கள். அவர்கள் கல்பாக்கத்தில் வேலை முடித்து விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை மதுரவாயலில் இன்னும் 7 நாளில் இந்த பக்கம் போக முடியாது.. டிராபிக் மாறுகிறது! ஹேப்பி சர்ப்ரைஸ் -
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு நிபந்தனைகள் தளர்வு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
மாற்றி யோசித்த சென்னை குடிநீர் வாரியம்.. வேஸ்ட் தண்ணீரில் 551 கோடி ரூபாய் வருமானம்.. எப்படி ? -
சென்னை மக்களே 'கரண்ட் பில்' இன்னும் கட்டவில்லையா.. மின்சார வாரியம் மிக முக்கிய அறிவிப்பு -
சென்னை ரிசார்ட்டில் பல் மருத்துவர் செய்த காரியம்.. ₹11 லட்சத்துக்காக பவர் பத்திரத்தில் ஆடிய ஆட்டம்! -
ரம்யாவின் படுக்கையறையில் புகுந்த சென்னை போலீஸ்காரர்.. டக்னு கையை பிடித்து.. மறு நொடியே பிக் ட்விஸ்ட் -
காது மடல் ஓட்டைகளுக்கு ஆபரேஷன்! சென்னை நட்சத்திர ஹோட்டலில் தங்கிய மும்பை இன்ஸ்டா பிரபலம் கைது! -
ஒருபுறம் மழை.. மறுபுறம் வெயில்.. 10 ஆம் தேதி வரை தமிழக வானிலை நிலவரம் என்ன? வானிலை மையம் அலர்ட்! -
“அரசு எங்களை ஏமாத்திருச்சு..” தேர்தல் நேரத்தில் போராட்டத்தை கையில் எடுக்கும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி கட்டுமானங்களுக்கு தடை! பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து வழக்கு! -
ஆளுநர் ரவி, குஷ்பு குறித்து அவதூறு பேச்சு.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் சிறை தண்டனை நிறுத்தம் -
சென்னை ஹைகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம்! யார் இவர்?












Click it and Unblock the Notifications