Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்பாக்கம்: ஆட்டோ-பஸ் மோதல், 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷேர் ஆட்டோவும் அரசு பஸ்ஸூம் மோதிக் கொண்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி, அரசு பஸ் ஒன்று நேற்று இரவு 7 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது. சதுரங்கபட்டினத்தை அடுத்த வெங்கபாக்கம் பெருமாள் கோவில் அருகே, சென்று கொண்டிருந்தபோது, பஸ்ஸூக்கு முன்னால் பைக்கில் இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர்.

பைக்கை வேகமாக கடந்து சென்ற பஸ், எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதனால் ஷேர் ஆட்டோ, அப்பளம் போல நொறுங்கியது.

இந்த விபத்தில் கீரப்பாக்கத்தைச் சேர்ந்த உமா (19), கிளியம்மாள் (28) மற்றும் ஷேர் ஆட்டோ டிரைவர் முருகானந்தம் (18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் ஆட்டோ பயணிகள் மணிகண்டன் (20), சரோஜா (18) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு கல்பாக்கம் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு பேர் இறந்தனர். மற்றவர்களின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் குறித்த தகவல் தெரியவில்லை.

ஷேர் ஆட்டோவில் வந்தவர்கள் அனைவரும் காண்டிராக்ட் கூலி தொழிலாளர்கள். அவர்கள் கல்பாக்கத்தில் வேலை முடித்து விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+