கல்பாக்கம்: ஆட்டோ-பஸ் மோதல், 5 பேர் பலி
சென்னை: ஷேர் ஆட்டோவும் அரசு பஸ்ஸூம் மோதிக் கொண்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி, அரசு பஸ் ஒன்று நேற்று இரவு 7 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது. சதுரங்கபட்டினத்தை அடுத்த வெங்கபாக்கம் பெருமாள் கோவில் அருகே, சென்று கொண்டிருந்தபோது, பஸ்ஸூக்கு முன்னால் பைக்கில் இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர்.
பைக்கை வேகமாக கடந்து சென்ற பஸ், எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதனால் ஷேர் ஆட்டோ, அப்பளம் போல நொறுங்கியது.
இந்த விபத்தில் கீரப்பாக்கத்தைச் சேர்ந்த உமா (19), கிளியம்மாள் (28) மற்றும் ஷேர் ஆட்டோ டிரைவர் முருகானந்தம் (18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் ஆட்டோ பயணிகள் மணிகண்டன் (20), சரோஜா (18) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு கல்பாக்கம் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு பேர் இறந்தனர். மற்றவர்களின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் குறித்த தகவல் தெரியவில்லை.
ஷேர் ஆட்டோவில் வந்தவர்கள் அனைவரும் காண்டிராக்ட் கூலி தொழிலாளர்கள். அவர்கள் கல்பாக்கத்தில் வேலை முடித்து விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்!












Click it and Unblock the Notifications